March 23, 2017

கோடையில் குளிர்


குளிர்நீர் குடிக்க விரும்பி குழவிகளும் அடம்பிடிப்பர் 

குளிர்பான கடைகள் தேடி இளைஞர்கள் இடம் பிடிப்பர் 

குளிர் பிரதேசங்கள் நோக்கி குடும்பத்துடன் படையெடுப்பர் 

குளிர்சாதனப் பெட்டியின் உறைவிப்பானை நிரப்பி வைப்பர்  

குளிரூட்டிகளுக்கு  ஒருநாளும் ஓயாமல் வேலை கொடுப்பர் 

குளிர்காற்று வேண்டி மொட்டை மாடியில் இரவைக் கழிப்பர் 

குளிர்நிழல் விழைந்து  வெயிலிலும் குடையோடு பயணிப்பர் 

குளிர் நீங்க மறுத்து குளியலறையில் சிலநேரம் தவமிருப்பர் 

அட ......குளிர்காலத்தை விட கோடையில்தான் 

குளிர் அதிகம் பேசப்படுகிறது ........

ஆனால் இவையெல்லாம் எனக்கு புரிவதில்லை - ஏனெனில் 

கோடை வெயிலும் நான் உன் வசமிருக்க  

குளிர்நிலவாய்த்  தெரிகிறதே !

1 comment:

  1. thalaivan vasam thalaivi irukka, kodaiyenna.....palaivanamum pani pirathesame......

    kavithai Arumai

    ReplyDelete