பள்ளிக்கால கனவுகள் நினைவு கூர்ந்தால்
வெள்ளிவானின் தூரம் சிறிதாய்த் தோன்றும் !!!
கல்லூரி நாட்களின் நட்புகள் கணக்கெடுத்தால்
கடல்மீறி விழுந்திடும் அலைகள் துளிகளாய்த் தோன்றும் !!!
காதல் பொழுதுகளின் பரிசுகள் குறிப்பெடுத்தால்
பாதங்கள் கடந்த கடற்கரை மணல் குவியலாய்த் தோன்றும் !!!
என் மகளுக்கு நானீந்த முத்தங்கள் எண்ணிப் பார்த்தால்
விண்மீன்கள் விரல் விட்டென்னும் புள்ளிகளாய்த் தோன்றும் !!!
இவை இருக்கட்டும் .......
கணவனாய் நீ கொட்டும் காதல் அளக்க விழைந்தால்
கண்ணெதிரே விரியும் உலகமே கடுகாய்ச் சிறுத்து விடும் !!!
No comments:
Post a Comment