April 4, 2012

உன்னருகில் !!!


பக்கம் பக்கமாய் கவிதைகள் உமிழும் மனம்
பக்கம் நீயிருக்கையில் அக்கம்பக்கம் மறக்கும்
பொறிகளின் வேகம் மிஞ்சும் மூளை உன்னருகில்
பொறிகளைந்தும் திசைவேறாய்ச் சிதறச் செய்யும்
வலம் தவறி இடமிருக்கும் இதயம் உன்னை
வலம் வந்து துடிப்புகள் தவற விடும்
பிழையின்றி உதிரும் சொற்கள் உன்னெதிர் தோற்று
பிழைக்க இடம் தேடி மீண்டும் வளை புகும்
விடையில்லா வினாவெல்லாம் உன் விழிவீச்சில்
விடைப் பெற்றுத் தொலையும் !!!

No comments:

Post a Comment