May 19, 2011

மெய்க்காதல்

பூக்களின் வகையறியா வயதில் நீ உதிர்த்த புன்னகைப்பூ

ங்கிய நிலவின் ஒளியில் நாம் பகிர்ந்த நிலாச்சோறு

மூச்சு முட்டும் பேருந்து நெரிசலில் உரசும் நம் விரல்கள்

நெஞ்சைத் தொடும் நிமிடங்களால் நிரம்பிய என் நாட்குறிப்பு

முட்கள் முழுவதுமாய் நீக்கி நீ எனக்கு பரிசளித்த ரோஜா

ண்கள் பார்த்து பேசும்பொழுது தவழும் உன் குறுஞ்சிரிப்பு

த்தம் இல்லா இரவில் நித்தமும் தோன்றும் உன் கனவு

சிந்தும் மழை நாட்களில் ஒற்றைக் குடையில் நம் பயணம்

சிப்பிகள் சேகரித்து நம் பெயர் எழுதிய கடற்கரை மணல்

விம்மி அழும் பொழுது கண்ணீர் துடைக்கும் உன் கைக்குட்டை

பொய்யேதும் சொன்னால் கோபத்தில் உயரும் உன் புருவம்

கார்கால மேகங்களில் உற்சாகமாய் நீ காட்டும் உருவங்கள்

செல்லும் இடமெல்லாம் தொடரும் உன் செல்லக் குறுஞ்செய்தி

வ்விடம் முடியும் என்றுத் தெரியா சாலையில் நம் பொடிநடை

வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொலைக்கச் செய்த உன் விழிகள்

ள்ளுண்ட வண்டாய் என்னைத் திணறச் செய்யும் உன் ஸ்பரிசம்

ற்றலில் உணராமல் உன் தொடுதலில் உணர்ந்திட்ட மின்சாரம்

ன்னைக் கொல்லும் இவையெல்லாம் மெய்க்காதலின் விளைவோ ?

No comments:

Post a Comment