12 டிசம்பர், 2017

இடம் பொருள் காலம் !

இருளைத் தவணை முறையில்

                      இடையிடையே அப்பத் துவங்கியிருக்கும் இரவில்

இசை உணரா செவிகளுக்கு   தினமும்

                      இசை கொணரும்  கடலலைகளின் அருகில்

இரவல் ஒளியும் இதயம் வருடும்  குளிரும் 

                       இணைத்து  ஒருங்கே உமிழும் நிலவொளியில்

இலை கவிழ்ந்தும் அந்தி மயங்கியதால்

                       இதழ் குவிந்தும் மணம் தவழும் வனத்தில்

இமை பொருத்தி இடை வளைத்து

                        இதழ் துவைத்து  இன்பம் கண்டிருந்தோம் !

இன்று

        இரவில்லை

                    இசையில்லை

                                நிலவில்லை

                                            வனமில்லை

ஆனாலும் இன்பமோ ஏராளம் !!!

இணைவது உன்னோடென்றால் இடம் பொருள் காலமேது ?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக