கவிதை ரசிகை
27 நவம்பர், 2011
மழைக் காதல்
இருள் விழுங்கிய காலை
இதயம் வருடிப் போன உன் கண்கள்
குளிர் நிரம்பிய காற்று
குதூகலமூட்டும் உன் விரல்கள்
மழைக் கொட்டும் மேகம்
மனதில் நீ விதைத்துப் போன மோகம்
ஜன்னலோரச் சாரல்
இடைவிடாத உன் உரையாடல்
மரமுதிர்க்கும் துளிகள்
நீ உதிர்க்கும் புன்னகை
என்று என்னைத் தொடரும் அனைத்தும் நீயாகவே தோன்ற
முழுதாய் நனைகிறேன் மழையில் !!!
6 நவம்பர், 2011
குடை
குடை விரித்து வெயில் மறைப்பதில்லை..
குடை நனைத்து மழை எதிர்ப்பதில்லை ..
ஆனால் உன் விழிகண்டால் மட்டும்..
குடையாய் விரிகிறது
என் மனம் ..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)