October 11, 2012

கடற்கரை குமளி !!!

கடல்மகள் ஏவாளாய் மாறி உனக்களித்த குமளியோ.. ?
நுரைகள் உணர்த்துவது அவளது அலை முத்தத்தின் ஈரமோ ..?
கடந்து வந்த பாதையை நீ காண மணலும் சுமந்து வந்தாளோ .. ?
நானில்லாத நேரம் உன்னுடன் களவுக்காதல் புரிவது முறையோ .. ?
சுவைத்த பக்கம் நானறியக் கூடாதென்று மறுபக்கத்தை பதித்தாயோ ..?
உன் காதலி நானென்று தெரிந்திருந்தும் உனக்கு பரிசளிப்பது நியாயமோ .. ?
என கேள்விகளால் துடித்து போகிறதென் மனம் இந்த புகைப்படம் கண்டவுடன் 
ஆனாலும் கடலை வெறுப்பதில்லை நம் காதலை தொடக்கி வைத்த காரணத்தால் ..



No comments:

Post a Comment