அரைத் தூக்கத்தில் எழுந்து
ஆசை முத்தமொன்று நெற்றியில் இட்டு
ஈர இதழ்களால் என் கன்னம் தொட்டு
உன் மார்போடு என்னை இழுத்து
ஊமையாகிப் போன என் இதழ் ருசித்து
எண்ணில்லா கதை பேசும் என் விழி பார்த்து
ஏக்கமாய் ஒரு பார்வை வீசி
ஐம்புலனும் சிலிர்க்க
ஒருமுறை அணைக்கிறாய் !!!!!
ஓயாமல் அலறும் அலாரம் அணைக்கிறேன் நான்
அடடா !!! அதிகாலைக் கனவு !!!
No comments:
Post a Comment