என்னை அழகாக்கிட
எப்பொழுதும் விழைவான்
என் மாயக்கண்ணாடி அவன் !
மனதில் நினைத்ததை
மணிப்பொழுதில் நிறைவேற்றுவான்
மகத்தான மாயமோதிரம் அவன் !
இதயம் விரும்பும் இடங்களுக்கு
இமைப்பொழுதில் இட்டுச்செல்வான்
இதமான மந்திரக்கம்பளம் அவன் !
மந்தகாச புன்னைகையாலும்
மயக்கும் வார்த்தைகளாலும்
மனதை பறிப்பான் ! மாயாவி அவன் !